பெலகாவி: சகோதரத்தை பறைசாற்றும் ரக்ஷா பந்தன் விழாவை முன்னிட்டு, தனது சகோதரனுக்கு ராக்கி வாங்குவதற்கு 10 ரூபாய் கொடுக்க கணவன் மறுத்ததால், 23 வயது பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் வட்கோன் பகுதியைச் சேர்ந்தவர் அஷோக் கொள்ளர். இவருக்கும், மகாதேவி என்ற பெண்ணுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அஷோக்குக்கு குடிப்பழக்கம் இருந்ததால், இந்த தம்பதிக்கு அவ்வப்போது சண்டை ஏற்பட்டு வந்தது.
இதனால், மகாதேவியின் சகோதரருக்கும், அவரது கணவருக்கும் இடையே நட்பு நிலவவில்லை. இந்த நிலையில், தனது சகோதரனுக்கு கட்டுவதற்காக ராக்கி வாங்க மகாதேவி 10 ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு அஷோக் மறுத்துள்ளார்.
இதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அஷோக் வீட்டை விட்டு வெளியேறியதும், மகாதேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கவலையில் ஆழ்த்தியது.