உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதி முன்னாள் எம்எல்சி சரோஜினி அகர்வால், சனிக்கிழமை பாஜகவில் இணைந்தார்.
லக்னெளவிலுள்ள பாஜக தலைமையகத்தில், துணை முதல்வரும், மாநில பாஜக தலைவருமான கேசவ் பிரசாத் மெளரியா முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்.
சமாஜவாதி கட்சி சட்ட மேலவை உறுப்பினர் பதவியிலிருந்து இந்த மாதம் 4}ஆம் தேதி பதவி விலகிய சரோஜினி அகர்வால், கட்சியில் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் ஓரங்கட்டப்படுவது தனக்கு வருத்தமளிப்பதாகவும், அதனால் பதவியிலிருந்து விலகுவதாகவும் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில், ""நான் இரு முறை சட்ட மேலவை உறுப்பினர் ஆனதற்கு தலைவர் முலாயம் சிங்தான் காரணம்.
அவர் தற்போது கட்சியில் செயல்படாத நிலையில் இருப்பதால், நான் பதவியிலிருந்து விலகுகிறேன்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், அவர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் அசோக் பாஜ்பாயும் கடந்த புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது.