ஜம்மு மக்களிடையே அச்சத்தை உருவாக்க தேசிய மாநாட்டுக் கட்சி முயற்சி: பாஜக

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35 ஏ} பிரிவை வைத்து, ஜம்மு பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி முயன்று வருவதாக

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35 ஏ} பிரிவை வைத்து, ஜம்மு பகுதி மக்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி முயன்று வருவதாக, பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஜம்மு}காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயகக் கட்சி அரசில் அங்கம் வகிக்கும் பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் அனில் குப்தா, இதுதொடர்பாக, சனிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு}காஷ்மீரில், பிற மாநிலத்தவர்கள் அசையாச் சொத்துகளை வாங்குவதற்கும், அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கவும் அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ பிரிவு தடை விதிக்கிறது.
இந்தச் சட்டப் பிரிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டப் பிரிவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யுமானால், ஜம்மு பகுதி மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் ஜம்மு பிராந்திய செய்தித் தொடர்பாளர் தேவேந்திர ரானா கூறுகிறார்.
இதன் மூலம், மற்றவர்களை விலக்கி வைக்க வேண்டும் என்ற அவரது கட்சியின் மனநிலை தெரியவருகிறது. இது, ஜம்மு பகுதி மக்களின் ஒருங்கிணைந்த கலாசாரம், மதச் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் மீதான நேரடித் தாக்குதலாகும்.
அரசமைப்புச் சட்டத்தின் 35}ஏ பிரிவை வைத்து, ஜம்மு பகுதி மக்களிடையே பெரும்பான்மைவாதத்தை ஊக்குவிக்கவும், அந்தப் பகுதி மக்களிடையே ஒரு வித அச்சத்தை உருவாக்கவும் தேவேந்திர ரானா முயலுகிறார்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 35}ஏ, சட்டப்படி சரியானதென்றால், தேசிய மாநாட்டுக் கட்சியினர், உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும். அதற்கு மாறாக, காஷ்மீர் மக்களை தூண்டி விடுவது ஏன்? போராட்டத்தில் ஈடுபடுவது ஏன்? என்று அனில் குப்தா கேள்வி எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com