மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஜேடி(யு) இணைவது ஏறத்தாழ உறுதியாகவுள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் அக்கட்சிக்கு 3 இடங்கள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மத்திய அமைச்சரவையில் ஜேடி(யு) எம்.பி.க்கள் ஆர்.சி.பி. சிங், ராம்நாத் தாகுர், ஹரிவன்ஷ் ஆகிய 3 பேரும் சேர்த்து கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது. பாட்னாவில் வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜேடி(யு) தேசிய நிர்வாகக் குழு கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.