சத்தீஸ்கர்: என்கவுன்ட்டரில் 2 நக்ஸல்கள் சாவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினருக்கும், நக்ஸல்களுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, காவல் துறை சிறப்பு டிஜிபி அவஸ்தி, செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
சுக்மா மாவட்டத்தில் கிஸ்தாராம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட வனப்பகுதியில் நக்ஸல்கள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து, அந்தப் பகுதியில் கூட்டுப் படையினர் சனிக்கிழமை இரவு முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அந்த வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்ஸல்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. பாதுகாப்புப் படையினரின் பதிலடிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், வனப்பகுதிக்குள் நக்ஸல்கள் தப்பியோடிவிட்டனர். அதையடுத்து, சம்பவ இடத்தில் இருந்து 2 நக்ஸல் தீவிரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர, 2 துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com