மகாராஷ்டிரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் அம்மாநில காங்கிரஸ் கமிட்டி செயலாளர் உயிரிழந்தார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி செயலாளராக இருந்து வந்தவர் சஞ்சய் சௌபானே. இவர், ஒளரங்காபாத்தில் நடைபெறும் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமது காரில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்றுக் கொண்டிருந்தார். அவருடன் தாணே நகர காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ண பர்ணேகர் மற்றும் கட்சி நிர்வாகி ராமகாந்த் மாத்ரே ஆகியோரும் பயணம் செய்தனர்.
இந்நிலையில், பாந்த்லா பாட்டா பகுதி அருகே கார் சென்றபோது, எதிரே வந்த பேருந்து ஒன்று அவர்களின் கார் மீது வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சஞ்சய் சௌபானே உயிரிழந்தார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.