நாட்டின் 71-ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. மேலும், இதர தனியார் நிறுவனங்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
பள்ளி, கல்லூரிகளில் சுதந்திரத்தை போற்றும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் நினைவு கூறப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குஜராத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் மாணவர்கள் அனைவரும் இணைந்து மிகப்பெரிய தேசியக் கொடியை எடுத்துக் கொண்டு ஊர்வலம் வந்தனர்.
குஜராத் மாநிலத்தின் தாபி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் இணைந்து சன்காத் அங்காடித் தெருக்களின் வழியாக 1,100 அடி நீளமுள்ள தேசியக் கொடியை சுமந்து ஊர்வலம் வந்தனர்.
மேலும், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.