பெங்களூருவில் தமிழில் எழுதப்பட்ட பேனர்கள் கிழிப்பு: கன்னட அமைப்பினர் வெறியாட்டம்

ஆடிக் கிருத்திகைக்காக தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால் பெங்களூருவில் பதற்றம் நிலவி
பெங்களூருவில் தமிழில் எழுதப்பட்ட பேனர்கள் கிழிப்பு: கன்னட அமைப்பினர் வெறியாட்டம்

பெங்களூரு: ஆடிக் கிருத்திகைக்காக தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால் பெங்களூருவில் பதற்றம் நிலவி வருகிறது.

பெங்களூருவில் சுதந்திர விழா மற்றும் ஆடிக் கிருத்திகைக்காக தமிழில் எழுதி வைக்கப்பட்டிருந்து பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்து வருகின்றனர்.

வேற்று மொழி ஆக்கிரமிப்பை பொறுக்க முடியாது என கர்நாடக முதல்வர் கூறிய நிலையில், கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் பெங்களூரு புலிகேசி நகரில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் உள்ள தமிழ் எழுத்துக்களை மட்டும் வெட்டி எறிந்து வருகின்றனர். இதையடுத்து பெங்களூருவில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com