பெங்களூரு வெள்ளம்: வாகனக் காப்பீடு நிறுவனங்களில் குவியும் இழப்பீடுக்கான விண்ணப்பங்கள்

பெங்களூருவின் தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்கள் பலரும், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய தங்களது வாகனங்களுக்கு இழப்பீடு கோரி காப்பீடு நிறுவனங்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.
பெங்களூரு வெள்ளம்: வாகனக் காப்பீடு நிறுவனங்களில் குவியும் இழப்பீடுக்கான விண்ணப்பங்கள்


பெங்களூர்: பெங்களூருவின் தென்கிழக்கு மற்றும் தெற்குப் பகுதி மக்கள் பலரும், கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கிய தங்களது வாகனங்களுக்கு இழப்பீடு கோரி காப்பீடு நிறுவனங்களை நோக்கி படையெடுத்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவில் கொட்டத் தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை பெய்த கன மழை காரணமாக பெங்களூரில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

இதில், சாலையில் மற்றும் வீட்டு வளாகத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கின. 

அடுத்த நாள் தங்களது வாகனங்களை மெக்கானிக் கடைகளுக்கு கொண்டு சென்ற பெரும்பாலானோர், அடுத்து காப்பீட்டு நிறுவனங்களை நோக்கி படையெடுத்தனர்.

பெங்களூரில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டன. பல காப்பீடு நிறுவனங்கள், வாகனங்களை நிறுத்த இடமின்றி, வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பி வருவதாகவும் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com