வட மாநிலங்களில் வெள்ளம்: மேலும் 74 பேர் பலி

பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்துக்கு மேலும் 74 பேர் உயிரிழந்தனர்.

பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்துக்கு மேலும் 74 பேர் உயிரிழந்தனர்.
இதனால், மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 217-ஆக உயர்ந்துள்ளது.
பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கடந்த 28 நாள்களுக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அந்த மாநிலங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். மேலும், லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் நடுவே சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பிகாரில் அராரியா, சீதாமார்கி, கிஸன்கஞ்ச், கிழக்கு சம்பாரன், சுபுவால் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளத்துக்கு கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 47 பேர் பலியாகினர். இதனால், அந்த மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 119-ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல், மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 49-ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், அஸ்ஸாமில் கடந்த இரண்டு நாள்களில் மட்டும் வெள்ளத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 49 -ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com