தம்புல்லா: இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் இலங்கையின் தம்புல்லா நகரில் பகல் இரவு ஆட்டமாக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த இலங்கை அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து இலங்கை 217 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கை. இந்தியாவும், இலங்கையும் கடைசியாக மோதிய 18 போட்டிகளில் 14-இல் இந்தியா வென்றுள்ளது.