பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு பெயரில் அரசு நிதி கையாடல்: மாயாவதி குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நிதி முறைகேடுகள் நடைபெறுகின்றன என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு பெயரில் அரசு நிதி கையாடல்: மாயாவதி குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் நிதி முறைகேடுகள் நடைபெறுகின்றன என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக, அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஹரியாணா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள அரசு கோசாலைகளில் பசுக்கள் துன்புறுத்தப்படுகின்றன. இதனால், பசுக்கள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரில், அரசின் நிதி கையாடல் செய்யப்படுவதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாகும்.
பாஜக ஆட்சியில் மனித உயிர்களுக்கு மதிப்பில்லை. அந்த நிலைமை, தற்போது பசுக்களுக்கும் ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்த உயிரிழப்பு தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் ஆர்எஸ்எஸ் அமைப்பு ஏன் விளக்கம் கேட்கவில்லை?
ராமர் கோயில் விவகாரத்தைப் போலவே, பசு பாதுகாப்பையும், ஓர் அரசியல், மதவாத, ஜாதிய பிரச்னையாக பாஜக கருதுகிறது. உண்மையில், நாட்டில் பதற்றமான, அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கவே, பசுக்களை கொன்றதாகக் கூறி, சிலர் மீது பசு பாதுகாவலர்கள் வன்முறை நிகழ்த்துகிறார்கள்.
எனவே, அரசின் கோசாலைகள், இறைச்சிக் கூடங்களாக மாறாமல் இருப்பதற்கு பசுப் பாதுகாப்பு தொடர்பான சட்ட திட்டங்கள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும். அந்த மறுஆய்வு, மக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தாத வகையிலும், குறிப்பிட்ட பிரிவினரை திருப்திபடுத்தாத வகையிலும் இருக்க வேண்டும் என்றார் அவர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு கோசாலை ஒன்றில் அடுத்தடுத்து 3 நாள்களில் 27 பசுக்கள் உயிரிழந்ததை அடுத்து, உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். ஆனால், சுவர் இடிந்ததால், அந்த பசுக்கள் உயிரிழந்ததாக அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com