அதிமுக லெட்டர் பேடை ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இரட்டை இலை விவகாரத்தில் எங்கள் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என மனுவை கொடுத்துள்ளோம். பொதுசெயலாளர் செயல்பட முடியாத நிலையில் துணைப்பொதுச்செயலாளர் செயல்படலாம்.
தேர்தல் ஆணைய விதிகளை மாற்றி கட்சியின் பெயர்களை மாற்றி அமைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.