புது தில்லி: 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குக் பிறகு 99% பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 8 கோடி மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படவில்லை.
அதே சமயம் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு, 99% பழைய ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுவிட்டது. ஒரு சதவீதத் தொகை மட்டும் திரும்பப் பெறப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.