காஷ்மீரில் நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் பிராந்தியத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 -ஆகப் பதிவானது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக் பிராந்தியத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 -ஆகப் பதிவானது.
இதுகுறித்து அந்த மாநில வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
லடாக்கில் சீன எல்லைப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4.59 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்காரணமாக, பொருள்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று போலீஸார் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com