நிலக்கரிச் சுரங்க ஊழல்: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா குற்றவாளி: தில்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா உள்ளிட்ட 4 பேரை குற்றவாளிகள் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிம
நிலக்கரிச் சுரங்க ஊழல்: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா குற்றவாளி: தில்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா உள்ளிட்ட 4 பேரை குற்றவாளிகள் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
அவர்களுக்கான தண்டனை விவரம் வியாழக்கிழமை (டிச.14) வெளியிடப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த ஊழல் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு புதன்கிழமை வெளியிடப்படும் என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது. 
அதன்படி, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் தனது தீர்ப்பை புதன்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
மது கோடா, ஹெச்.சி. குப்தா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனம் ஆகியோர் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதியாகின்றன; ஆதலால் 4 பேரையும் குற்றவாளியாக அறிவிக்கிறேன்.
4 பேர் விடுவிப்பு: அதேநேரத்தில், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவன இயக்குநர் வைபவ் துல்ஷ்யன், அரசு ஊழியர்கள் வதந்த் குமார் பட்டாச்சார்யா, விபின் பிகாரி சிங், கணக்கு தணிக்கையாளர் (சார்டர்டு அக்கவுண்டன்ட்) நவீன் குமார் துல்ஷ்யன் ஆகிய 4 பேரை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கிறேன்.
குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 4 பேருக்குமான தண்டனை விவரம் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று நீதிபதி பரத் பராசர் அறிவித்தார்.
வழக்குப் பின்னணி: மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடைபெற்ற ஊழலில், அரசுக்கு சுமார் ரூ.1.80 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக சிஏஜி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. 
இதுகுறித்து சிபிஐ நடத்திய விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ராஜ்கரா நிலக்கரிச் சுரங்கம், கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வினி அயர்ன் மற்றும் ஸ்டீல் உத்யோக் நிறுவனத்துக்கு நிலக்கரிச் சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்தது.
இந்த விவகாரம் குறித்து, தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் தலைமைச் செயலர் ஏ.கே. பாசு, அரசு அதிகாரிகள் வசந்த் குமார் பட்டாச்சார்யா, விபின் பிகாரி சிங், வினி அயர்ன் மற்றும் ஸ்டீல் உத்யோக் நிறுவனம், அந்நிறுவனத்தின் இயக்குநர் வைபவ் துல்ஷ்யன், கோடாவின் நெருங்கிய உதவியாளர் விஜய் ஜோஷி, கணக்கு தணிக்கையாளர் 
நவீன் குமார் துல்ஷ்யன் ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com