விரக்தியில் ராகுல் காந்தி: பியூஷ் கோயல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரக்தியில் இருக்கிறார் என்பதையே, அவரது பேட்டி வெளிப்படுத்துகிறது என்று பாஜக விமர்சித்துள்ளது.
விரக்தியில் ராகுல் காந்தி: பியூஷ் கோயல்

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி விரக்தியில் இருக்கிறார் என்பதையே, அவரது பேட்டி வெளிப்படுத்துகிறது என்று பாஜக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் காங்கிரஸ் உள்ளது. 
இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பெயரை காப்பாற்றிக் கொள்ள முடியுமா? என்ற விரக்தியில் உள்ளார். ஆதலால்தான், 2ஆம் கட்டத் தேர்தல் வியாழக்கிழமை நடக்கவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி அவர் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
தேர்தல் நடைபெற 48 மணி நேரத்துக்கு முன்பு, இத்தகைய பேட்டி அளிப்பதற்கு அனுமதிப்பதை எங்களால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இதுபோன்ற பேட்டிகளை பாஜக எப்போதும் அளித்ததில்லை.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா குற்றவாளியாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். சுயேச்சை எம்எல்ஏவாக இருந்த அவரை, காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல்தான் முதல்வராக்கினார். அதேபோல், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் தில்லியைச் சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இதிலிருந்து ஊழலுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி ஏன் விமர்சிக்கிறது என்பது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம் என்று பியூஷ் கோயல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com