குஜராத்தில் காந்தி பிறந்த தொகுதியான போர்பந்தரில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும், ஹிமாசலில் 68 தொகுதிகளுக்கும் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் குஜராத்தில் காந்தி பிறந்த தொகுதியான போர்பந்தரில் பாஜக வேட்பாளர் பாபுபாய் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அர்ஜூன் மோத்வாடியாவைவிட 1,855 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
முன்னதாக குஜராத்தில் வாக்குப்பதிவின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ப்ளூடூத் வழியாக இணைக்கப்பட்டிருப்பதாக அர்ஜூன் மோத்வாடியா குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.