புதுதில்லி: நாளை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு எமோஜியை பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பொதுக் கொள்கை மற்றும் அரசு பிரிவுத் தலைவர் மஹிமா கவுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நாளை குடியரசு தினத்தை கொண்டாட உள்ள இந்தியர்களுக்கு, அது தொடர்பான உரையாடல்களை டிவிட்டரில் மேற்கொள்ளும் போது பயன்படுத்த புதிய எமோஜியை வழங்குவதில் மகிழ்கிறோம்.
இந்த எமோஜியானது இந்திய தேசிய கொடியை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் #RepublicDay or #HappyRepublicDay or #RepublicDay2017 உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தும் பொழுது இது தானாகவே தோன்றும்.
இந்த எமோஜியானது வரும் 27-ஆம் தேதி வரை பயன்பாட்டிலிருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.