புதுதில்லி: ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ள விபரம் வருமாறு;
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் பட்டியல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.
ஒவ்வொரு துறையிலும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகள் பற்றிய விபரங்கள் தாமதமின்றி வெளியிடப்பட வேண்டும்.
இத்தகைய ஊழல் அதிகாரிகள் பற்றிய விபரங்கள் பொதுமக்கள் தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
இவ்வாறு மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.