'ஸ்டிரைக் வாபஸ்' மீண்டும் தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை

தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்ட பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பேச்சுவார்த்தைக்குப் பிறகு மீண்டும் துவங்கியது.
'ஸ்டிரைக் வாபஸ்' மீண்டும் தொடங்கியது மெட்ரோ ரயில் சேவை

பெங்களூரு மத்திய கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை 6 மணியளவில் மெட்ரோ ஊழியருக்கும், போலீஸார் ஒருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

மெட்ரோ ஊழியர்கள் சிலரை காவல்துறை கைது செய்தது. இதன்காரணமாக, மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.

இந்நிலையில், இருதரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு தகராறில் ஈடுபட்ட இரண்டு போலீஸாரும் கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து, மெட்ரோ ரயில்வே ஊழியர்கள் தற்காலிக வேலைநிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com