புதுதில்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ராம்நாத் கோவிந்த்க்கு மீராகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட மீராகுமார் 34 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
இந்நிலையில் எனக்கு ஆதரவு அளித்த அனைத்து கூட்டணி அரசியல் கட்சிகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த்க்கு எனது வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.
மேலும் சவாலான காலகட்டங்களில் அரசியல் அமைப்பினை நிலைநிறுத்த வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.