குடியரசு தலைவர் தேர்தல்: 21 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு

இன்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, 21 எம்.பிக்கள் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.
குடியரசு தலைவர் தேர்தல்: 21 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிப்பு

புதுதில்லி: இன்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, 21 எம்.பிக்கள் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டன.

இத்தேர்தலில், 4,120 எம்எல்ஏக்களும், 776 எம்.பிக்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர். சுமார் 99 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இந்த வாக்கு எண்ணிக்கையின் போது  21 எம்.பிக்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது. இதை அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு செல்லாத வாக்களித்த எம்.பிக்கள் யார், யார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com