மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், இதுதொடர்பாக
மாட்டிறைச்சி தடை விவகாரத்தில் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படும்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவிப்பு

புதுதில்லி: நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்கும், வாங்குவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகள், பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாம், அவை குறித்து  பரிசீலிக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.

பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும் வாங்கவும் மத்திய அரசு கடந்த மே 23 ஆம் தேதி தடை விதித்தது. இதற்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தராமையா, திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார், மேகாலய முதல்வர் முகுல் சங்மா உள்ளிட்டோர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''மாட்டிறைச்சி தடை என்பது மத்திய அரசின் கவுரவ பிரச்சினை இல்லை. எந்தவொரு சமுதாயத்தையோ, உணவு பழக்க வழக்கத்தையோ, இறைச்சி தொழிலையோ குறிவைத்து அரசாணை வெளியிடப்படவில்லை. இந்த விதிகளால் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்ற ஹர்ஷ்வர்தன், இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகள், பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கலாம். அவற்றை பரிசீலிக்க அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com