உ.பி: பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதல்: 22 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 17 பேர்

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகிரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com