லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகிரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.