சித்தாபூர்: உத்திரபிரதேசம் மாநிலம் மாநிலம் சித்தாபூரில் தொழிலதிபர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேர் மர்மநபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்த பின்பு வீட்டில் இருந்த பணத்துடன் மர்மநபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் குறிந்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்தும், அவர்கள் தொழில் போட்டியா, முன்விரோதமா, எதற்காக சுட்டுக்கொன்றனர், இதில் உறவினர்களின் பங்கு ஏதாவது உள்ளதா என பல கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.