காஸியாபாத்: வங்கி லாக்கர் அறையின் சுவரில் துளையிட்டு பொருட்கள் கொள்ளை

காஸியாபாத்தில் உள்ள மோடி நகரின் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பல கோடி மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.


காஸியாபாத்தில் உள்ள மோடி நகரின் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பல கோடி மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

சுமார் 30 வங்கி வாடிக்கையாளர்களின் 30 லாக்கர்களில் இருந்த விலை மதிப்புள்ள பொருட்கள், ஆவணங்களை கொள்ளையர்கள் கடந்த ஞாயிற்றுக் கிழமை கொள்ளையடித்துள்ளனர்.

காலையில் வங்கியைத் திறந்த அதிகாரிகள், பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் சூரிய வெளிச்சம் விழுவதைப் பார்த்துத்தான் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பதை அறிந்தனர்.

வங்கி லாக்கரில் இருந்து கொள்ளைப் போன பொருட்களின் மதிப்பை கணக்கிடும் பணி நடந்து வருகிறது. மோப்ப நாய்கள் உதவியுடன் கொள்ளையர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com