லக்னெள: லக்னோவில் விற்பனை வரி அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்னெளவில் உள்ள விற்பனை வரி அலுவலகத்தின் ஐந்தாவது மாடியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த 5 தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க போராடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சேதங்கள், உயிரிழப்பு போன்ற மற்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.