இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு 3ஆவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாக "இரட்டை இலை' சின்னம் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, பெங்களூவை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அண்மையில் கைது செய்யப்பட்டு தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வழக்கில் 2 முறை சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனுவை தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதனை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் இம்மனுவையும் தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இத்துடன் சேர்த்து சுகேஷ் சந்திரசேகரின் ஜாமீன் மனு 3ஆவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.