புது தில்லி: மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு குறித்து விளக்கம் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மேலும், இறைச்சிக்காக மாடுகளை விற்க தடை விதித்து மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தனியார் அமைப்பு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இறைச்சிக்கக மாடு விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அகர்வால், எஸ்.கே கவுல் அடங்கிய விடுமுறை கால அமர்வு, இது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதையடுத்து வழக்கு விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.