ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிஜ்ஹேபரா பகுதியின் அர்வனி கிராமத்தில் பிஜ்பிஹபராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 3

ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பிஜ்ஹேபரா பகுதியின் அர்வனி கிராமத்தில் பிஜ்பிஹபராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் பிஜ்ஹேபரா பகுதியின் அர்வனி கிராமத்தில் பயங்கரவாதிகள் நடமாடுவதாக பாதுகாப்பு படைகளுக்கு உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதையடுத்து அர்வணி கிராமத்தில் தேடுதல் வேட்டையையில் ஈடுபட்டனர், அப்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய  என்கவுன்டரில் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஜுனட் மாடோ, நிட்டார் அஹ்மத்தும், மாட்டோ உள்ளிட்ட 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து ஏ.கே 47, ஆறு பத்திரிகைகளும், இரண்டு பெட்டிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com