இம்பால்: மணிப்பூரில் இன்று காலை 4.05 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்பு குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
வட கிழக்கு மாநிலத்தில் ஒரே மாதத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இது.
ஒரு சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் மணிப்பூரின் சூரசந்த்பூர் மாவட்டத்தை தாக்கியது.
ஜூன் 1 ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் செனாபட்டி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.