ஜிஎஸ்டி விளம்பர தூதராக அமிதாப் பச்சன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் பாலிவுட்டின்
ஜிஎஸ்டி விளம்பர தூதராக அமிதாப் பச்சன்

புதுதில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் இதனை பிரபலப்படுத்தும் நோக்கில் பாலிவுட்டின் பிரபல நடிகர் அமிதாப் பச்சனை விளம்பர தூதராக மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியம் நியமித்துள்ளது.

74 வயதாகும் அமிதாப் பச்சன், ஜிஎஸ்டி குறித்த 40 விநாடி வீடியோ காட்சியில் நடித்துள்ளார். இது இப்போது அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

"ஒரு தேசம் ஒரே வரி விதிப்பு,ஒரே சந்தை" என்ற நோக்கத்தை உணர்த்தும் வகையில் ஜிஎஸ்டி அமல்படுத் தப்படுவதாக நிதி அமைச்சகம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஜிஎஸ்டி தொடர்பான வீடியோவில் இந்த வரி விதிப்பு முறை குறித்து அமிதாப் விளக்குகிறார். மூன்று வண்ணங்களைக் கொண்ட தேசிய கொடியை போன்ற ஒருங்கிணைந்த தன்மை கொண்டது ஜிஎஸ்டி என்று விளக்குகிறார். அதாவது "ஒரே தேசம், ஒரே வரி விதிப்பு, ஒரே சந்தை" என்று அவர் கூறுகிறார்.

இதற்கு முன்பு ஜிஎஸ்டி-யின் விளம்பர தூதராக பிரபல பாட்மிண்டன் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து இருந்தார்.

2014 ஆண் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வரி நிர்வாகத்தில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய முக்கியமான பொருளாதார சீர்திருத்தம் இதுவாகும். இதை அமல்படுத்துவதால் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கு முனை வரி விதிப்புகள் இல்லாமல் மிகக் குறைந்த வரி விதிப்பாக 5 சதவீதமும், உயர்ந்த வரி விதிப்பாக 28 சதவீதமும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தவிர சில பொருள்கள், சேவைகளுக்கு 12 சதவீதம் மற்றும் 18 சதவீத வரிவிதிப்புகள் இடம்பெறுகின்றன.

ஜிஎஸ்டி கவுன்சிலில், மத்திய மற்றும் மாநில அரசாங்கள் ஒன்றாக இணைகிறது. இதுவரை 17 முறை இந்தக் கவுன்சில் கூடி வரி வரம்பை இறுதி செய்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தங்கள், தேசிய பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்காக ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் தொடக்க விழாவும், சிறப்பு கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இந்த சிறப்பு கூட்டத்தில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்கள். அனைத்து மாநில முதல்வர்களுக்கும் விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என ஜேட்லி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com