ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

சோப்பூர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோப்பூர் மாவட்டம் பாஸ்பல்பூர் பகுதியில் இன்று புதன்கிழமை காலை பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேலும், உயிரிழந்த பயங்கரவாதிகளிடமிருந்து இரண்டு ஆயுதங்கள் மீட்கப்பட்டன.

சோபூர் போலீஸார், எஸ்ஜிஓ மற்றும் ராணுவத்தின் 22 ஆர்ஆர் இணைந்து இந்த பயங்கரவாத நடவடிக்கையை முறியடித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com