ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் முகமது யாசின் மாலிக் ஸ்ரீநகரில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, போலீஸார் கூறியதாவது:
ஸ்ரீநகர், லால் சௌக் பகுதியிலுள்ள வீட்டில் முகமது யாசின் மாலிக் தங்கியிருந்த நிலையில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஸ்ரீநகரிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ரமலான் பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீஸார் தெரிவித்தனர்.