பிப்ரவரியில் 10, +2 பொதுத்தேர்வு நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே இறுதித் தேர்வை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரியில் 10, +2 பொதுத்தேர்வு நடத்த மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் திட்டம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பாகவே இறுதித் தேர்வை நடத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது.

மார்ச் மாதத்திற்கு பதிலாக பிப்ரவரி மாதமே தேர்வை நடத்துவது என்றும், அதன்மூலம் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் மதிப்பீட்டின் தரம் உறுதிப்படுத்தப்படும் எனவும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடிகள் இருப்பதாகவும், மறு மதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் கிடைப்பதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதனை சரிசெய்யும் வகையில் முன்கூட்டியே தேர்வு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும், ஆயினும் பள்ளி நிர்வாகங்களுடன் கலந்தாலோசிக்கப்படும் எனவும் சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com