குஜராத்தில் மாங்காய் பறித்த சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், வால்சாத் என்ற பகுதியில் மாங்காய் பறித்த சிறுவன் மீது அத்தோட்ட உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டார். இந்த சம்பவத்தில் சிறுவன் காயமடைந்தான். இதையடுத்து அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். மேலும் இதுகுறித்து சிறுவனின் குடும்பத்தார் தோட்ட உரிமையாளர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாங்காய் பறித்த சிறுவன் மீது துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.