மத்திய அரசை விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை; அரசின் சாதனைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார் மத்திய புள்ளியல் துறை அமைச்சர் சதானந்த கெளடா.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
முன்னாள் மக்களவை உறுப்பினர் ரம்யா, பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் விமர்சித்து கிண்டல் செய்துள்ளார். அவரது தலைவர் ராகுல் காந்தியும், பாஜக அரசை கோட், சூட் அரசு என்று கிண்டல் செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கிண்டல் செய்வதை நிறுத்த வேண்டும். மத்தியில் சிறந்த ஆட்சியை பிரதமர் மோடி வழங்கி வருகிறார். மக்களின் பிரச்னைகளைத் தீர்க்கும் அரசாக பாஜக விளங்குகிறது. மத்திய அரசை விமர்சிப்பவர்களுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. மத்திய அரசின் சாதனைகள், வளர்ச்சிப் பணிகளை மக்கள் அறிவார்கள் என்றார்.