அல்மோரா: உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில், பேருந்து மீது பாறை விழுந்ததில் பேருந்தின் முன்புறம் நசுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.
காக்ரிகாட் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விபத்தில் பேருந்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும், 6 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.