டிடிவி தினகரன் ஜாமீன் மனு: 26ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

டிடிவி தினகரன் ஜாமீன் மனு: 26ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

டிடிவி தினகரன் ஜாமீன் மனு மீதான விசாரணை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

இரட்டை இலை சின்னத்தை சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கு சாதகமாகப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜுனா, நரேஷ் (எ) நாது சிங், பாபு பாய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பாபு பாய் நீங்கலாக மற்றவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். பாபுவின் போலீஸ் காவல் சனிக்கிழமை முடிவடைந்த நிலையில் அதை காவல்துறை வேண்டுகோளின்படி மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டித்து சிறப்பு நீதிபதி பூணம் சௌத்ரி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ஜாமீன் கேட்டு தில்லி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தினகரன் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கையை ஏற்று மனு மீதான விசாரணையை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தில்லி நீதிமன்றம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com