மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பாக அதிகாரப்பூர்வ மொழி
பெயர்ப்பாளரிடம் நீதிமன்றம் வாக்குமூலம் பதிவு செய்தது.
லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதியும், குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவருமான அபு ஜுண்டாலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் பாஸ்போர்ட் மற்றும் சில ரகசிய ஆவணங்களில் இருந்த முக்கியத் தகவல்களை மொழிபெயர்த்து அளிப்பதற்காக முகமது நக்வி என்பவர் நியமிக்கப்பட்டார்.
இந்த ஆவணங்கள் அனைத்தும் பாகிஸ்தானில் போலியாகத் தயாரிக்கப்பட்டவை.
இந்த வழக்கில் நக்வி இரண்டாவது முக்கிய சாட்சி ஆவர். முதல் சாட்சி, அமெரிக்காவில் சிறைவாசம் அனுபவித்துவரும் டேவிட் கோல்மேன் ஹெட்லி என்ற பயங்கரவாதி ஆவர்.
ஹெட்லியிடம் கடந்த 2016-ஆம் ஆண்டு விடியோ முறையில் விசாரணை நீதிமன்றம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக, முகமது நக்வியிடம் அரசு தரப்பு சிறப்பு வழக்குரைஞர் உஜ்வால் நிகம் விசாரணை நடத்தினார். இரண்டாவது நாளாக புதன்கிழமையும் அவரிடம் நிகம் குறுக்கு விசாரணை நடத்த
வுள்ளார்.மகாராஷ்டிர மாநிலம், பீட் மாவட்டத்தைச் சேர்ந்த அபு ஜுண்டால் சவூதி அரேபியாவிலிருந்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.