மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக அப்பகுதி காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதையடுத்து முர்ஷிதாபாத் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு போலியாக அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மொத்த மதிப்பு ரூ.5,96,000 என கணக்கிடப்பட்டது.
மேலும், போலி ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டது தொடர்பாக 3 பேரை காவல்துறை சனிக்கிழமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.