பெங்களூருவில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், வெள்ளத்தில் சிக்கிய காரில் பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். அவரை அங்குள்ளவர்கள் பத்திரமாக மீட்டனர்.
பெங்களூரு மழை வெள்ளத்துக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்தான் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.
வெள்ளநிற கார் ஒன்று சுமார் 4 அடிக்கும் மேல் சாலையில் ஓடிய வெள்ளநீரில் சிக்கியது. அப்போது அந்த காருக்குள் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி சத்தமிட்டார்.
அச்சமயம் அந்தக் கார் வெள்ளத்தில் மெதுவாக மூழ்கத் தொடங்கியது. இதற்குள்ளாக அங்கிருந்த 4 பேர் அந்த வெள்ளத்தில் குதித்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து அந்தப் பெண்ணை காருக்குள் இருந்து பத்திரமாக மீட்டனர். இதில் 3 பேர் காவல்துறையினர் ஆவர்.