இடைத்தேர்தல் வெற்றி: 'மீண்டும் எழுச்சி பெறுகிறது காங்கிரஸ்'

பஞ்சாப் மற்றும் கேரளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டு எழுந்து வருவது தெளிவாகியுள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி
இடைத்தேர்தல் வெற்றி: 'மீண்டும் எழுச்சி பெறுகிறது காங்கிரஸ்'

பஞ்சாப் மற்றும் கேரளத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டு எழுந்து வருவது தெளிவாகியுள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுனில் ஜாக்கர் ஏறத்தாழ 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 
அதேபோன்று கேரளத்தில் உள்ள வேங்கரா மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் வாகை சூடினார். இதைத் தவிர, கடந்த வாரம் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற நாந்தேட் நகராட்சித் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.
இந்த வெற்றிகள் தொடர்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி, ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மத்திய பாஜக அரசின் செல்வாக்கு சரிந்து வருவது தெளிவாகிறது. தொடர் தோல்விகளில் இருந்து காங்கிரஸ் கட்சி மீண்டு வருவதையும் உணர முடிகிறது.
எதிர்வரும் குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்யும் என்பதற்கான முன்னோட்டமாக இந்த முடிவுகள் அமைந்துள்ளன என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com