மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். 
மகாராஷ்டிராவில் லாரி கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர். 

கர்நாடகா மாநிலத்தில் டைல்ஸ் ஏற்றிக்கொண்டு நேற்றிரவு லாரி ஒன்று மகாராஷ்டிராவின் கரத்தை நோக்கி புறப்பட்டது. இந்த லாரி இன்று அதிகாலை சங்க்லி மாவட்டத்தில் வந்துகொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்தவர்களில் 3 பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com