காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம், சோப்பூர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வீடு ஒன்றில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்புப் படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.