புதுதில்லி: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர் வர்க்கத்திற்கு தலைவணங்குகிறேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதி, இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் 2-வது குடியரசுத் தலைவரான ராதாகிருஷ்ணன் சிறந்த கல்வி மேதையாவார். ஆகையால் இவரது நினைவை போற்றும் வகையில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இன்று கொண்டாடப்படும் ஆசிரியர் தினத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், சமுதாயத்தில் சிந்தனை வளர்ச்சிக்காகவும், மகிழ்ச்சியான கல்விக்காக மனதை வளர்த்துக்கொள்வதற்காக தங்களை அர்ப்பணித்த ஆசிரியர்கள் சமூகத்திற்கு தலை வணங்குகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், தலை சிறந்த ஆசிரியராகவும், தேசியவாதியாகவும் வாழ்ந்த டாக்டர்.சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.