புதுதில்லி: நாளை மறுநாள் செவ்வாய்கிழமை (செப்.12) மாலை 4.15 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 2014 ஆண்டு மே மாதம் பதவியேற்றது. இதுவரை 3 முறை மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நாளை மறுநாள் செவ்வாய்கிழமை (செப்.12) மாலை 4.15 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக இக்கூட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.