குடியரசுத் தலைவருடன் உ.பி. முதல்வர் சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
குடியரசுத் தலைவருடன் உ.பி. முதல்வர் சந்திப்பு

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தில்லிக்கு வந்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தார். அதன் பின்னர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரையும் அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆனால், இந்த சந்திப்புகளின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 65 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆதித்யநாத் ஆலோசனை நடத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com