யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பாக்பட் பகுதியில் யமுனை ஆற்றில் 60 பேருடன் பயணம் செய்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 12 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள போலீசார் மீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.